அறிவுசார் சொத்துரிமை சட்டத் தின் கீழ் தஞ்சாவூர் சீரக சம்பா அரிசி, மதுரை ஜிகர்தண்டா, ஆத்தங்குடி டைல்ஸ் உள்ளிட்ட 40 பொருட்களுக்கு புதிதாக புவிசார் குறியீடு கோரி விண் ணப்பிக்கப்பட்டுள்ளது என சென்னை அறிவுசார் சொத்து ரிமை அட்டர்னி சங்கம் தெரிவித் துள்ளது. அறிவுசார் சொத்துரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு என்ன என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். அறிவுசார் சொத்துரிமை இயக் கம் சார்பில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத் துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. அந்த வகையில், ‘புதுமை மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை’ என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இது தொடர்பாக சென்னை அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி கூறியதாவது: அறிவுசார் சொத்துரிமை தினத்தை ஆண்டுதோறும் பெரிய அளவில் பொதுமக்களிடம் பிரபலப்படுத்தி வருகிறோம். கடந்த 2015-16-ல் மட்டும் இந்தி யாவில் 3 லட்சத்து 41 ஆயி ரத்து 86 புதிய காப்புரிமைகள், முத்திரைகள், புதிய வடிவமைப்பு கள், புவிசார் குறியீடுகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து மட்டுமே 6,326 புதிய கண்டு பிடிப்புகள், 7,094 புதிய வடி வமைப்புகள், 65,045 புதிய வணிக அடையாளங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அறிவுசார் சொத்துரிமை சட்டத் தின் கீழ் தஞ்சாவூர் சீரக சம்பா அரிசி, மதுரை ஜிகர்தண்டா, ஆத்தங்குடி டைல்ஸ் உள்ளிட்ட 40 பொருட்களுக்கு புதிதாக புவிசார் குறியீடு கோரி விண் ணப்பிக்கப்பட்டுள்ளது என சென்னை அறிவுசார் சொத்து ரிமை அட்டர்னி சங்கம் தெரிவித் துள்ளது. அறிவுசார் சொத்துரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு என்ன என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். அறிவுசார் சொத்துரிமை இயக் கம் சார்பில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத் துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. அந்த வகையில், ‘புதுமை மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை’ என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இது தொடர்பாக சென்னை அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி கூறியதாவது: அறிவுசார் சொத்துரிமை தினத்தை ஆண்டுதோறும் பெரிய அளவில் பொதுமக்களிடம் பிரபலப்படுத்தி வருகிறோம். கடந்த 2015-16-ல்...